Next Story
Newszop

புதுக்கோட்டையில் பரபரப்பு! திருமணமாகி மூன்றே மாதத்தில் இளைஞர் தற்கொலை! சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார்!

Send Push
புதுக்கோட்டையில் பரபரப்பு:புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகிய பெண்ணுடன் திருமணம் ஆகிய மூன்று மாதங்களில், இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குடிமையான்மலையைச் சேர்ந்தவர் பாண்டி (24). அவரது தந்தை மற்றும் தாய் விவாகரத்தானதால் அவரது தாய் மாமா வீட்டில் வளர்ந்து வந்துள்ளார் பாண்டி. instagram மூலமாக பழகிய பெண்ணுடன் திருமணம்: இவர் விராலிமலையில் உள்ள சன்மார் கம்பெனியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் instagram மூலமாக கும்பகோணத்தைச் சேர்ந்த எழிலரசி (21) என்ற பெண் பழக்கமாகி உள்ளார். instagram மூலமாக மலர்ந்த காதலால் மாமா எவ்வளவு அறிவுரை செய்தும் வீட்டை விட்டு வெளியே வந்த பாண்டி இலுப்பூரில் தனியாக வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். கூகுள் செய்திகள் பக்கத்தில் TimesXP Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. வீடியோ செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். இதனையடுத்து கும்பகோணத்தைச் சேர்ந்த எழிலரசி என்ற பெண்ணுடன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துள்ளது. மூன்றே மாதத்தில் இளைஞர் தற்கொலை: இந்நிலையில் நேற்றைய தினம் தனது அம்மாவிற்கு உடம்பு முடியவில்லை என்று கூறி ஊருக்கு புறப்பட்டுள்ளார் எழிலரசி. இந்த நிலையில் நேற்று இரவு தூக்கில் தொங்கியபடி சடலமாக பாண்டி என்பவர் மீட்கப்பட்டுள்ளார். பின்பு அவரது உறவினர்கள் எழிலரசிக்கு தகவல் அளிக்கவே ஓ அப்படியா சரி என்று விட்டு போனை துண்டித்துள்ளார். தற்போது வரை அந்தப் பெண், திருமணம் செய்த கணவர் இறந்து 12 மணி நேரத்திற்கும் மேலாகியும் வந்து பார்க்காததால் சந்தேகம் அடைந்துள்ளனர். கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்.. உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள். பின்னர் உறவினர்கள் இவரது இறப்பில் மர்மம் உள்ளதாக கூறி இலுப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இளைஞரின் உறவினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் தற்போது இலுப்பூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு நடைபெற்று வருகிறது.
Loving Newspoint? Download the app now